இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு முக்கிய செய்தி

ஈழ விடுதலைப் போராட்டத்தில் போராடிய பெருமளவான போராளிகள் மன அழுத்தத்தின் காரணமாகவும் மனவியல் தாக்கத்தின் காரணத்தினாலுமே உயிரிழக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது சமூகத்துடன் வாழும் முன்னாள் போராளிகள் பெருமளவிலானோர் நோய்வாய்ப்பட்டு இறப்பது தொடர்பிலும், அவர்கள் ஏன் நோயாளர்களாக மாறி வருகின்றனர் அதற்கான காரணங்கள் என்ன என்பது தொடர்பிலும் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், வடமாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவடையவுள்ள நிலையில், குறித்த சபை வடக்கு மக்கள் விடயத்தில் எவ்வாறான விடயங்களை சாதித்துள்ளது என்பது தொடர்பிலும் அவர் இதன்போது எடுத்துரைத்துள்ளார்.
Blogger இயக்குவது.