பிரித்தானிய அரசே யுத்தக் குற்றவாளியான பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்!


இனப்படுகொலையாளி திராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெற கூடாது என தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.





வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று 15.03.19 (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது.





இதன் போதே நீதிமன்றத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.





பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.





இந்நிலையில் அரசியல் குறுக்கீடு மற்றும் அழுத்தம் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றம் திரும்பப் பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.





பெரும் திரளாக ஒன்று கூடியுள்ள தமிழர்கள் ‘பிரித்தானிய அரசே யுத்தக் குற்றவாளியான பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்’ தமிழினத்தின் மேலான சர்வதேசத்தின் அநீதி இது என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






Blogger இயக்குவது.