வேதாந்தாவுக்கு ஹைட்ரோ கார்பன்: தமிழகத்தில் 3 இடங்களில் எடுக்க ஒப்பந்தம்

தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் டெல்லியில் நேற்று கையெழுத் தானது. தமிழகத்தின் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.

"நில ஆய்வு செய்யப்படாத 59,282 சதுர கி.மீ. பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, கடந்த ஜனவரியில் 'ஹெல்ப்' எனும் தளர்த்தப்பட்ட ஹைட்ரோகார்பன் ஆய்வு மற் றும் உரிமம் முறையில் டெண்டர் விடப்பட்டது. 13 மாநிலங்களில் மொத்தம் 55 இடங்களுக்கு 9 நிறுவனங்களால் 110 டெண்டர்கள் கோரப்பட்டன.

இந்நிலையில், ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் (சிஜிஎச்) சார்பில் டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பல்வேறு பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங் களுடன் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந் தங்கள் கையெழுத்தாயின.

இதில், தூத்துக்குடியின் ஸ்டெர் லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனத்துக்கு 41, ஆயில் இந்தியாவுக்கு 9, ஓஎன்ஜிசிக்கு 2, கெயில், பாரத் பெட்ரோ ரிசோர்ஸ், இந்துஸ்தான் ஆயில் எக்ஸ்ப்ளோரேஷன் கம்பெனி ஆகிய பொதுத் துறை நிறுவனங்களுக்கு தலா ஒரு இடங்கள் கிடைத்துள்ளன. மொத்தம் உள்ள 55 இடங்களில் நிலப் பகுதியில் 46, கடல் பகுதியில் 9 இடங்கள் அமைய உள்ளன. இவற்றில் 3 இடங்கள் தமிழகத்தில் உள்ளன.

புதுச்சேரியின் காரைக்காலில் தொடங்கி தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட் டங்களை ஒட்டிய ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் ஹைட்ரோகார் பன் எடுக்க வேதாந்தாவுக்கு 2 இடங்கள் கிடைத்துள்ளன. இதுதவிர, பொதுத் துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு சிதம்பரத்தை ஒட் டிய நிலப்பகுதியில் ஓர் இடம் கிடைத்துள்ளது." என்று விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
Blogger இயக்குவது.