தஞ்சையில் மதிமுக சார்பில் துரை. பாலகிருஷ்ணன்


மதிமுகவுக்குக் கிடைத்த ஒரே காவிரி டெல்டா தொகுதியான தஞ்சையில், துரை.பாலகிருஷ்ணன் போட்டியிடுகிறார். மதிமுக துணைப் பொதுச் செயலாளராக இருப்பவர் துரை பாலகிருஷ்ணன். எல்.கணேசன், மதிமுகவிலிருந்து விலகியபோது துரை.பாலகிருஷ்ணனையும் உடன் வருமாறு அழைத்தார். ஆனால் அவரை நிராகரித்தார் துரை. பாலகிருஷ்ணன். இதன் மூலம் வைகோவின் நன்றிகளைப் பெற்றவர் துரை பாலகிருஷ்ணன்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடக்கூரைச் சேர்ந்தவர். துணை பொதுச் செயலாளர். ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக இருந்தவர். மதிமுகவின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர் துரை பாலகிருஷ்ணன். இதனால்தான் தஞ்சை தொகுதியையும் வைகோ பிடிவாதமாக கேட்டு வாங்கி துரை பாலகிருஷ்ணனிடம் கொடுத்துள்ளார்.
Blogger இயக்குவது.